ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு : ரகசியத்தை கொட்டி தீர்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இந்த ஆட்சி நீடிக்குமா, தாங்குமா என்ற எண்ணம் மக்களை போன்று தங்களுக்கும் இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் தப்பித்தேன், பிழைத்தேன் என குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே கடந்த முறை வெற்றி பெற்றதாகவும், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்து கூட பார்த்ததில்லை, பதவி தரப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கூறினார்.

Read more – நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி… புதுச்சேரியில் கவிழ்ந்த ஆட்சி…

தேர்தலுக்குப் பிறகுதான் இந்த ஆட்சி ஒரு நிலையான ஆட்சியாக மாறியது. அதற்கு முதல்வர் பழனிசாமியை  தான் பாராட்ட வேண்டும். .எல்லா பிரச்சினைகளையும் அவர் சமாளிக்க கூடியவராக இருந்தார். அதற்கான அறிவும் ,ஆற்றலும் அவரிடம் உள்ளதால் மக்களால் எந்த குற்றத்தையும் சொல்லமுடியாது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version