தமிழகத்தின் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
இது தொடர்பாக காயத்ரி, சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும், ஏனெனில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இட ஒதுக்கீடு 50% மேலாக இருக்ககூடாது. ஆனால் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது, இதனால் தகுதியுள்ள பலர் பாதிககப்படுகின்றனர். எனவே இந்த இட ஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஏற்கனவே மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கோடு இணைத்து அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்ததோடு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்…