கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கட்டணம் செலுத்தி இருந்தால் தேர்ச்சி என உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து செமஸ்டர்களுக்கான தேர்வுகளையும் ரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் வெளியிட்டார்.
இதன் பின்னர் அவர் பேசுகையில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே மாணவர்கள் தேர்ச்சி தான். கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி என தெரிவித்துள்ளார்.