காய்கறி வாங்கப் போனால் கொசுராகத் தரும் கருவேப்பிலை கூட தற்போது கிலோ 100 ரூபாயை எட்டியிருக்கிறது.
காய்கறி கடைகள் மற்றும் மார்க்கெட்களில் கருவேப்பிலை எப்போதும் பொது மக்களுக்கு இலவசமாகவே கொடுக்கப்படும். இந்த கருவேப்பிலை விலை தற்போது கிலோ ரூ.100 ஐ தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100 ஐ தொடும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு கருவேப்பிலையும் தப்பவில்லை. அதன் விலையும் ரூ.100 ஐ தொட்டுள்ளது. இத்தனை நாளாக கடைகளில் இலவசமாக கிடைத்து வந்த கருவேப்பிலையின் விலை கூட உயர்ந்து இருப்பது மக்களை கவலையடைய வைத்துள்ளது. இதேபோன்று கொத்தமல்லியும் ஒரு கட்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.