14 ஆயிரத்தை தாண்டிய தமிழக கொரோனா பாதிப்பு : கோவையிலும் ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 14,000 ஐ தாண்டியது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று 14,842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, சென்னையில் இன்று 4,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுவில் 1,163 பேருக்கும், கோவையில் 1,004 பேருக்கும், திருவள்ளூரில் 793 பேருக்கும், மதுரையில் 596 பேருக்கும், சேலம் 490 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,475 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 8,078 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 52 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரையில் தமிழகத்தில் மொத்தம் 1,00,668 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version