புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக, அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு தலைமை செயலகத்தில் புரேவி புயல் பாதிப்பு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதன் பிறகு முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்தும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளளார்.
மேலும், புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பின்வருமாறு;-
- சென்னை – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் நியமனம்
- திருவாரூர் – உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
- கடலூர் – மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்
- நாகப்பட்டினம் – நகராட்சி நிர்வாதத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.