தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுத்த தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும், ரெம்டெசிவிர் மருந்து தயாரிக்கப்படும் மாநிலங்களில் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Read more – இன்றைய ராசிபலன் 24.04.2021!!!
தொடர்ந்து, தேசிய நலன் கருதி விரைந்து தடுப்பூசி தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.