வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் சமீபகாலமாக வாகனங்களின் நம்பர் பிளேட் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. அதனால், எதிர்பாராத விதமாக விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்பவர்கள் ஆகியோரை கண்டறிவது சிரமமான செயலாக உள்ளது.
எனவே நம்பர் பிளேட்டில் பின்பற்ற வேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து, மற்றும் எண் ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்களை சட்டப்படி தண்டிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் வெயிட்ட விவரங்கள்:
- அனைத்து இருசக்கர வாகனங்களின் பின்பக்கம் நம்பர் பிளேட்டில் எழுத்தின் உயரம் 355 மி.மீ., அகலம் 75 மி.மீ., நம்பரின் இடையே 5 5 மி.மீ. இருத்தல் வேண்டும்.
- மூன்று சக்கர பயனற்ற வண்டிகளின் நம்பர் பிளேட்டில் பின்புற எழுத்தின் உயரம் 40 மி.மீ., அகலம் 7 மி.மீ., நம்பரின் இடையே 5 மி.மீ., இருத்தல் வேண்டும்.
- 700 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் முன்பக்கம் நம்பர் பிளேட்டில் எண் 15 மி.மீ., உயரம், அகலம் 2.5 மி.மீ., நம்பரின் இடையே 2.5 5 மி.மீ., இடைவெளி இருத்தல் வேண்டும்.
- 500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன், பின் பக்கங்கள் எழுத்தின் உயரம் 35 மி.மீ., அகலம் 7 மி.மீ., நம்பரின் இடையே 5 மி.மீ., இருத்தல் வேண்டும்.
- 500 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன், பின் பக்கங்கள் எழுத்தின் உயரம் 40 மி.மீ., அகலம் 7 மி.மீ., நம்பரின் இடையே 5 மி.மீ., இருத்தல் வேண்டும்.
- மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களின் முன், பின் பக்கங்கள் நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 65 மி.மீ., அகலம் 10 மி.மீ., எழுத்தின் இடையே 10 மி.மீ., இருத்தல் வேண்டும்.
- அனைத்து வகை வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். எழுத்து கருப்பு நிறத்தில் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து தனியார் வகை வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் வெள்ளையாகவும் எழுத்து கருப்பிலும் இருத்தல் வேண்டும். வாகன பதிவு எண் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.