ஆன்லைன் பருவ தேர்வுகளை ஒத்திவைத்த பல்கலைக்கழங்கங்கள்…

வரும் மே மாதம் நடைபெற இருந்த ஆன்லைன் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் மே மாதம் 3 ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வளாக வளாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மறு தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரன்… வதந்தி பரப்பியதாக கிரிமினல் வழக்கு பதிவு

அதேபோல், சென்னை ஐஐடி மே 10 ம் தேதி முதல் தொடங்கவிருந்த இறுதி பருவ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மே 17 ம் தேதி முதல் தொடங்க இருந்த ஆன்லைன் பருவ தேர்வுகள் வினாத்தாள் தயாரிப்பு பணிகள் முடிவடையாததால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version