பெரும் சோகத்தில் தமிழகம்… நடிகர் விவேக் காலமானார்…

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரிவு மருத்துவர்கள் சார்பில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

100 சதவீத இரத்த குழாயில் அடைப்பு இருந்ததால் 24 மணி நேரத்திற்கு பிறகு தான் எதையும் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அவருக்கு மருத்துவக்குழு எக்மோ, ஆஞ்சியோஸ் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் நடிகர் விவேக்(59) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு திரைத்துறையை சார்ந்த பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர். கடந்த ஏப்ரல் 15 ம் தேதி பொதுமக்கள் விழிப்புணர்வு பெற ஓமந்தூர் மருத்துவமனையில் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவரின் இந்த தீடிர் மறைவிற்கு தடுப்பூசி தான் காரணம் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் மருத்துவர்கள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version