ஜனவரி மாதத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வருகிற 15 ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 26 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28 ம் தேதி (வியாழக்கிழமை) வள்ளலார் நினைவு நாள் ஆகிய 3 நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று அரசு அறிவித்தது.
அதன்படி, வருகிற 15 ம் தேதி, 26 ம் தேதி மற்றும் 28 ம் தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்டங்களில் இந்த உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கைகளுக்கு விடப்பட்டுள்ளது.
Read more – அரவிந்த் சாமியின் 50 சதவீத இருக்கை கருத்து : எனிமி பட தயாரிப்பாளர் கொடுத்த காட்டமான விமர்சனம்
டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் டி.மோகன் சார்பில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்களுக்கு அறிக்கைகளும் விடப்பட்டு ஒரே மாதத்தில் மட்டும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருக்கின்றன.