நான் சாகப்போகிறேன் – டிக்டாக் பிரபலம் வெளியிட்ட வீடியோ…

மதுரை காவல் ஆணையருக்கு தான் சாகப்போவதாக கூறி வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூரியா தேவி.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வசித்து வருபவர் சூரிய தேவி இவரின் தினசரி வேலையே தினம் ஒரு பிரபலம் என தேர்ந்தெடு அவரை அவதூறாக பேசி அதன் மூலம் விளம்பரம் தேடுபவர் இவர்.

ஆனால் சில மாதங்களாக இவரின் விடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பார்க்க முடியாமல் இருந்தது. அப்போதுதான் இவர் சிக்காந்தர் எனும் ஆணுடன் சண்டையில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை இவரை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர். இதனை அறிந்த சூர்யா தேவி தற்போது தலைமறைவாக இருக்கின்றார். அவரை காவல் துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் தன்னை கைது செய்யவரும் போலீசுக்கே இவர் ஓர் தற்கொலை வீடியோ அனுப்பியுள்ளார். இதனை பார்த்து வெறுப்பான போலீசார் இருக்கின்ற வேளையில் இதுவேற ஒரு வேலையா என்று காந்திநகரில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது அவர் தன் வீட்டின் மின் விசிறியில் தூக்கு கயிற்றினை மாட்டி வைத்துவிட்டு அவர் கட்டிலில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த போலீசார் இதுவும் ஒரு நாடகம் தானா என்று அவரை கண்டித்து விட்டு சென்றுள்ளனர்.

Exit mobile version