பண்டைய கால மன்னராட்சியில் நாடு பல நேரங்களில் மன்னரை மட்டுமே நம்பி இல்லை. பல தேசங்கள் மகாராணிகளால், இளவரசிகளால் ஆளப்பட்டது. மன்னராட்சி நடந்தாலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பெண்களிடமே இருந்தது. உலகத்தையே வியக்க வைத்த சிறந்த பத்து அரசிகளைப் பற்றி காண்போம்.
பண்டைய காலத்து பெண்கள் அழகில் மட்டுமின்றி அறிவிலும், திறமையிலும், போர் பயிற்சியிலும், வித்தையிலும் சிறந்து விளங்கினர். படைகளை திரட்டி எதிரி நாட்டுடன் போரிடும் அளவுக்கு திறன் பெற்றிருந்தனர்.
ராணி சம்யுக்தா:
சம்யுக்தா கன்னோசி நாடு மன்னர் ஜெயச்சந்திரனின் மகள் ஆவார். அழகில் சிறந்த இவர் தனது காதல் கதையினால் வரலாற்றில் இடம் பெற்றவர். சம்யுக்தாவின் அழகை போற்றாதோர் யாரும் இல்லை, இவர் அழகை பற்றி வாய் வழி சொல்லாக கேட்ட டெல்லி அரசன் பிரித்விராஜ் இவர் மீது காதல் வயப்பட்டார். இருப்பினும் சம்யுக்தாவின் தந்தைக்கும் இவருக்குமான பகையினால் ஜெயச்சந்திர மன்னன் மறுத்ததால் சம்யுக்தாவை கடத்தி சென்று திருமணம் செய்தார். மத்திய கால இந்தியாவில் இவர்களது காதல் கதை மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இவர்களது காதல் கதையை மையமாக கொண்டு ராணி சம்யுக்தா என்னும் திரைப்படம் எம்ஜிஆர் மற்றும் பத்மினி நடிப்பில் எடுக்கப்பட்டது.
ராணி பத்மாவதி:
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் சர்ச்சைக்குரிய பெயராகவும் அனைவரும் தேடி படித்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு பிரபலமடைந்த பெயர் தான் பத்மாவதி. இவர் இந்தியாவின் சித்தோர்க்கோர் ராஜ்யத்தின் ராணியும் மன்னன் ராவல் ரத்தன் சென்னின் மனைவியும் ஆவார். அரசன் ரத்தன்சிங் இவரை மணக்க சுயம்வரத்தில் கலந்து கொண்டு அனைவரையும் வென்ற போதும் கூட தன்னுடன் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்று நிபந்தனையிட்டார். பத்மாவதி ரத்தன்சிங் பத்மாவதியுடன் போட்டியிட்டு அவரை வென்று திருமணம் செய்து கொண்டார். முகமதிய பேரரசின் மன்னன் அலாவுதீன் கில்ஜி பத்மாவதியின் அழகில் மயங்கி அந்நாட்டின் மீது போர் தொடுத்து மனுதர்மத்தை மீறி அரசனின் முதுகில் குத்திக் கொன்றார். மகாராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜி அவளை அடைவதற்கு முன்பே தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
மகாராணி காயத்ரி தேவி:
மகாராணி காயத்ரி தேவி ஜெய்ப்பூரின் ராஜ மாதா என்று அழைக்கப்பட்டார். கூச் பெகர் என்னும் மாவட்டத்தில் இளவரசியாக பிறந்த இவர் ஜெய்ப்பூர் மன்னனை மணந்து ஜெய்ப்பூரில் மூன்றாவது ராணியாக இருந்தார். தனது இளமைக்காலத்தில் அழகுப்பதுமையாக இருந்த இவர் இங்கிலாந்து சென்று உயர் கல்வி பெற்றார். குதிரை ஏற்றத்திலும் பயிற்சி பெற்றிருந்தார். இந்தியாவில் மன்னராட்சி முடிவுற்ற போதும் இவர் ஒதுங்கி கொள்ளாமல் அரசியல் களம் கண்டு தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ராஜாஜியின் சுதந்திரக் கட்சி ராஜஸ்தானில் வேரூன்றி வளர இவர் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
மிர்சாபுரத்தின் இளவரசி சீதா தேவி:
இந்தியாவின் வாலிஸ் சிம்ப்ஸன் என சொல்லப்பட்ட இவர் மிர்சாபூரின் இளவரசி ஆவார். அந்தக்காலத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரை திருமணம் செய்து கொண்ட இவர் தனது அழகினாலும் பண்பினாலும் உலகப் புகழ் பெற்றார்.
ராணி விஜயா தேவி:
மஹாராணி விஜயா தேவி அழகில் மட்டுமல்லாமல் இசையில் சிறந்து விளங்கினார். கர்நாடக சங்கீதம் மற்றும் வீணை கற்று கொண்டார். வெளிநாடுகளுக்கு சென்று பியானோ கற்று கொண்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்காக பியானோ மற்றும் வீணை வாசித்திருக்கிறார். அதன் பிறகு பல நிறுவனுங்களுடன் இணைந்து இசைக்காக பணியாற்றி இருக்கிறார்.
கராமின் இளவரசி சீதா தேவி:
கராமின் இளவரசி கபூர்தலா சீதா தேவி அந்த காலத்திலேயே ஐரோப்பிய மொழிகளை கற்று இருந்தார். அழகிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய இவர் ஃபேஷன் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
மஹாராணி ஜிஜாபாய்:
ஜிஜா பாய் ராஜமாதா என்று அழைக்கப்பட்டவர். மராத்திய பேரரசை நிறுவிய சிவாஜியின் தாய் ஆவார். மராட்டிய மன்னன் சிவாஜியை சிறு வயதில் இருந்தே நாட்டுப்பற்றுடனும் கலாச்சாரப்பற்றுடனும் வளர்த்தவர். மராட்டிய சாம்ராஜ்யம் உருவாக இவர் முக்கியமான காரணம் ஆவார்.
ஜான்சி ராணி என்னும் மணிகர்னிகா:
இலட்சுமி பாய் வாரணாசியில் பிராமனக் குடும்பத்தை சேந்தவர். சிறுவயதிலேயே குதிரை ஏற்றம் பயிற்சியை பெற்றிருந்தார். ஜான்சி நாட்டின் மன்னனை மணந்த பிறகு ஜான்சி ராணி லட்சுமி பாய் என அழைக்கப்பட்டார். பிரிட்டானிய அரசை எதிர்த்து கிளர்ச்சி நடந்த போது ஆங்கிலேயரை எதிர்த்து தன படைகளுடன் தைரியமாக போரிட்டார்.
அக்கா தேவி:
சாளுக்கியர்களின் இளவரசியான அக்கா தேவி ஒரு ராணியாக மட்டும் பார்க்கப்படாமல் தெய்வமாக பார்க்கப்படுகிறார். அழகும் திறமையும் தாண்டி ஆளுமை திறன் கொண்டவராக இவர் விளங்கினார்.
ருத்ரமா தேவி:
மஹாராணி ருத்ரமா தேவி வராங்கல்லை ஆண்ட காகதீய அரசி ஆவார். தன் தந்தை கணபதி தேவரின் மறைவிற்கு பிறகு ராணியாக முடி சூட்டி கொண்டார். பல சிற்றரசுகளின் தொல்லைகளையும் போர்களையும் சரியாக சமாளித்து திறம்பட ஆட்சி செய்தார்.
வேலு நாச்சியார்:
ராமநாதபுரம் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி-சக்கந்தி முத்தாத்தாளுக்கு பிறந்த ஒரேய மகளாவார் எனினும் ஆன் பிள்ளை போலவே வளர்க்கப்பட்டார் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் போராட்ட வீரர் ஆவார்.