சுத்தி ஒரே காதல், கல்யாணம் என்று சமூக வலை தளங்கள் முதல் அக்கம் பக்கம் வரை அறிவிப்புகள் வந்துகொண்டே இருப்பது போல உள்ளது. இது நடுவில் நாம் மட்டும் சிங்கள்-ஆக இருந்தால் எப்படி சமாளிப்பது…படித்து தான் பாருங்களேன்
என் நெருங்கிய தோழிக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. அவளுக்கு வாழ்க்கை அமைந்ததில் மகிழ்ச்சி தான் என்றாலும், எனக்கு கவலை தான், அவளைப் பிரிய வேண்டுமே என்று. இது முற்றிலும் இயல்பான உணர்வு தான். நீங்கள் பொறாமை மிக்கவர் என்றோ கசப்பான குணமுடையவர் என்றோ கண்டிப்பாக அர்த்தமாகாது
தனிமையும், வழக்கத்தில் சில மாற்றங்களும் ஏற்படுகின்றது. பின்னால் விடப்பட்டதைப் போன்ற உணர்வு வருகிறது. இதைச் சமாளிக்க ஒரு சில வழிகள் இங்கே. உபயோகப்படும் என்று நம்புகிறேன்.
சொந்தமாக புதிய விஷயங்களை முயற்சிக்கலாம்
நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களை ஆராய இது ஒரு சிறந்த வாய்ப்பு
முதலில் தனியாக சாப்பிடும்போதோ வெளியே செல்லும்போதோ நீங்கள் சற்று வித்தியாசமாக உணரலாம்.ஒருமுறை நீங்கள் தனியாக இருக்க நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால், தனிமை உணர்வு நன்றாகக் குறைந்துவிடும்.
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நண்பர்களிடம் வெளிப்படுத்தலாம்
இதையெல்லாமா வெளியே சொல்வது என்று தான் இருக்கும். இருந்தாலும் உங்கள் திருமணமான நண்பர்களிடம் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் எந்த கௌரவக் குறைச்சலும் இல்லை.
தனியாக இருப்பது போல் உணர்கிறீர்கள் அல்லது உங்கள் நண்பருடன் செலவிடும் நேரம் குறைவதாக உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்துங்கள்.
நண்பர்கள் ஒருவருக்கொருவர் இன்னும் முக்கியம் என்பதை வெளிப்படுத்த வேண்டும்,, அவர்கள் தங்களின் நெருங்கிய நட்பை இன்னும் பராமரிக்க முடியும் என்று நம்புகிறார்கள்,
அதே நேரத்தில் அது இயல்பாகவே மாறப்போகிறது. ஒரு காலத்தில் கிடைத்த அன்போ நேரமோ அதே போல் கிடைப்பதில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் வெவ்வேறு குடும்பங்களின் அங்கங்களாக இருக்கப் போகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்
கேள்வி கேட்டு நச்சரிக்கும் வட்டாரத்தை தவிருங்கள்
சுற்றிலும் திருமணம் ஆனவர்கள், காதலர்கள் நிறைந்த இடத்தில உங்கள் காதல், திருமண விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்டால், அதைத் தவிர்க்க கற்றுக் கொள்ளுங்கள். எப்போதோ தான் சந்திக்கும் வாய்ப்பே வருகிறது என்றாலும் உங்களுக்கு சங்கடமான விஷயங்களில் கேள்விகளைப் பொறுத்துக் கொள்ளத் தேவையே இல்லை.
இந்த விஷயம் வேண்டாம், என் காதல் வாழ்க்கையைப் பற்றி அவையில் பேசுவதை நன் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிடுங்கள்.
சிங்கிளாக இல்லாதவர்களுடன் நேரம் செலவிடுங்கள்
நீங்கள் விலக விலக, இன்னும் தனிமையாக உணர்வீர்கள்.
அடிக்கடி இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள், மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறையோ அவர்களை சந்திக்க முயலுங்கள்
சிங்கிளாக இருப்பது பெரிய கவலையாக மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள்
நீங்கள் மட்டும் சிங்கள் இல்லை. உங்களைப் போன்றே பலரும் வாழ்க்கைத் துணை தேடி வருகிறார்கள்
நான் ஏன் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறேன் என்று ஆராய்ந்து உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் இருக்க முயலுங்கள். உங்களுக்கு ஏற்றவரை இன்னும் சந்திக்கவில்லையே தவிர உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்பதை நம்புங்கள்.
புதிய மனநிலை வரவழைத்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே முன்னேற்றிக் கொள்ளுங்கள். எப்போதும் தனியாகவே இருக்கப்போவதில்லை. உங்களுக்கு ஏற்றவர் சற்றே தாமாதமாயினும் வந்து சேர்ந்து விடுவார் என்று நம்புங்கள்.
எல்லாருக்கும் ஆகிவிட்டது என்று எண்ணி, பெயருக்கென்றே திருமணம் செய்து கொள்ள வேண்டாம். திருமணம் நடந்துவிட்டால் மட்டும் போதாது, நல்ல கணவன்/மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை என்றாலும் அதுவும் தவறு கிடையாது. நிம்மதியாக வாழ்வதே முக்கியம.
எல்லாவற்றையும் நினைவில் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய தாழ்ந்த எண்ணங்களை வைத்திருக்காதீர்கள். எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.