காட்டிற்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டிற்குள் சிங்கம் தான் என்பது போல், சினிமா உலகில் மிகப்பெரிய ஆளுமை சூப்பர் ஸ்டார் என்று எல்லாம் புகழப்பட்டாலும் ரஜினிகாந்தின் வீட்டு ராஜ்ஜியம் மொத்தமும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கையில் தான் உள்ளது. கடந்த இரு தினங்களாகவே சோசியல் மீடியாவில் ராகவேந்திரா திருமண மண்டப விவகாரம் தீயாய் கொளுந்துவிட்டு எரிகிறது. அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிடையாது, கல்லா பெட்டியை கன்ட்ரோலில் வைத்திருக்கும் லதா தான் எனக்கூறப்படுகிறது.
ஏற்கனவே பள்ளி வாடகை விவகாரத்தில் அவமானப்பட்டது போதாது என்று, தற்போது ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்திலும் ரஜினியை மரண பங்கம் செய்திருக்கிறார். அவருடைய ஆலோசனையின் படியே சென்னை ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் தரப்பு வழக்கு போட்டுள்ளது. சட்டத்தில் உள்ள சலுகைகளை எல்லாம் சுட்டிக்காட்டி வரி வசூலை ரத்து செய்ய லதா ரஜினிகாந்த் தரப்பில் திட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால் கோர்ட்டிலோ நடந்தது எல்லாம் அப்படியே உல்டாவாக மாறிவிட்டது.
நோட்டீஸ் அனுப்பி 10 நாட்கள் கூட பொறுக்க முடியாதா? மனுவை வாபஸ் வாங்குறீங்களா? இல்ல அபராதம் போடவா? இது என்ன கோர்ட்டா? இல்லை சென்னை மாநகராட்சி அலுவலகமா? என சரமாரியாக சென்னை உயர் நீதிமன்றம் கேட்ட கேள்விகளில், ரஜினிக்கு “கொஞ்ச நேரத்தில் தலையே சுத்திடுச்சு…!”. இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதை தவிர வேறு வழியில்லை என்பதால் ரஜினி தரப்பு வழக்கறிஞரும் நீதிபதியிடம் பலமுறை மன்றாடி மனுவை திரும்ப பெற்றார்.
பிரச்சனை இத்தோடு முடியும் என எதிர்பார்த்த ரஜினிகாந்திற்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ‘நெகட்டீவ்’ விமர்சனங்கள். தலைவருக்கு சொத்து வரி செலுத்த கூட காசியில்ல அப்புறம் எப்படி கட்சி ஆரம்பிக்க போறார் என ரஜினி தொண்டர்களை சீண்டாதவர்களே கிடையாது.ஏற்கனவே இந்தா ஆரம்பிப்பார், அந்தா ஆரம்பிப்பார் என ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்காக காத்துக்கிடந்த ரசிகர்கள் பலரும் கூட சூப்பர் ஸ்டாரின் இந்த செயலால் நொந்து போயினர்.
எங்கடா இன்னம் விட்டால் கொஞ்ச நஞ்சம் இருக்குற மானத்தையும் வாங்கிடுவாங்க போலயே என ரஜினி அரண்டே போய்விட்டார் போல. கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடிக்க திட்டம் போடுற தனது கனவில் ஆறரை லட்சம் ரூபாய் வடிவில் ஆப்பு வந்துவிடுமோ? என கடுப்பானவர், இன்று காலை சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அபாரத தொகையான 9.386 ரூபாயுடன் சேர்த்து, 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை கட்டியுள்ளார்.
அதற்கு முன்னதாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் #அனுபவமே_பாடம் என்ற ஹேஷ்டேக்குடன், ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம் என தலைவர் போட்ட ட்வீட்டிற்கு காரணம் இதுதாங்க… அவருக்கே தெரியாமல் அவசர அவசரமாக அரங்கேற்றப்பட்ட இந்த விவகாரத்தில், தனது அரசியல் ஆசை பொசுக்கிப் போய்விடுமோ என்று தான் அபராத தொகையை செலுத்துவதற்கு முன்னதாக, இப்படியொரு பதிவை போட்டு ரசிகர்கள் மனதில் உயர்ந்துவிட்டார் ரஜினிகாந்த்.