நாமளும் பிக் பாஸ் கஞ்சா கருப்பு அண்ணன் மாதிரி தான் கேக்கவேண்டியதா இருக்கு..எங்க பாத்தாலும் இந்த பெண்ணிய வாதிகள் வந்துட்டாங்க..வாங்க இன்னிக்கே இந்த பஞ்சாயத்தை முடிச்சுடுவோம்
இப்போல்லாம் பெண்ணியம் அடிக்கடி கேக்கற வார்த்தையாகி போச்சு. தப்பி தவறி ஏதாவது கேட்டுட்டா உடனே வந்துடறாங்க..’நான் ஒரு பெண்ணியவாதி..என்ன பாத்து அப்படி ஒரு கேள்வி நீங்க கேக்கலாமா?’. நேர்ல மட்டும் இல்ல, பேஸ்புக், இணையதளம்னு எங்க பாத்தாலும் இது நடக்குது! பெண்ணியம் அப்டின்றது உண்மையில என்ன?
பல வருஷமா வெளி உலகத்த பாக்காம சமையல் அறைக்குள்ளேயே அடைஞ்சிருந்த பெண்களுக்கு குரல் கொடுக்கணும்னு வந்த நல்ல விஷயம் தாங்க பெண்ணியம். இன்னிக்கு அதோட அர்த்தமே பாதி பேருக்கு தெரியல என்பது தான் உண்மை…ஆண் வர்கத்தை தாழ்த்தி பெண்கள் தான் எல்லாருக்கும் மேலே-னு சொல்றது தான் பெண்ணியம் னு நெனச்சிட்டு இருக்காங்க..
இவங்க அளப்பர தாங்கமுடில…இவங்க எப்படி வேணுனாலும் துணி போடுப்பாங்களாம்…கேட்டா பெண்ணியம் னு சொல்லுவாங்களாம்..நாம நமக்காக தான் உடை போட்டுக்கறோம்..யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னாலும்..அது கலாச்சார சம்மந்தப்பட்ட விஷயம் ..பெண்ணியம் கெடையாது..ரெண்டையும் போட்டு கொழப்பறாங்க
இது கூட பரவால்ல…ஆண்கள் பண்ற எல்லாத்தையும் நாங்களும் பண்ணுவோம் னு கெளம்பிருக்காங்க ஒரு குரூப் ..அதுல என்ன அவ்வளவு பெருமை? நீங்களே உங்கள அவங்களுக்கு கீழ னு நெனச்சிருக்கீங்க னு தானே அர்த்தமாகுது?
பெண்கள் செய்யற ஒரு சில விஷயங்கள் ஆண்களால நெனச்சு கூட பாக்க முடியாது தெரியுமா? தனித்துவமான குணத்தையெல்லாம் ஏன் கொண்டாட மாட்டேங்கறாங்க அப்படினு தான் புரியல..எல்லாருமே ஒரே மாதிரி ஆயிட்டா எதுக்கு இவளோ பேர் உலகத்துல?
இதுல என்ன இன்னோரு கொடுமைன்னா…பெண்ணியம் ஒரு பொதுவான வட்டம் கெடையாது….வெளி நாடுகளில் இருக்கற புரிதல் வேற..வாழ்க்கை வேற..அவங்களோட பெண்ணியமே வேற..அதை புரிஞ்சுக்காம அத அப்படியே இந்தியாவுல கடைபிடிக்கலாமா?
இப்போல்லாம் கல்யாணம் பண்ணிக்கலையா னு கேக்கவே பயமா இருக்கு..உடனே கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்..பண்ணாலும் கர்ப்பம் ஆகமாட்டேன் அப்படி இப்படினு சொல்றாங்க..நிஜமாவே இவங்களோட விருப்பமா…இவங்களோட சூழ்நிலை காரணமா எடுத்த முடிவு தானா இல்லைனா எல்லாரும் பன்றாங்க நாமளும் பண்ணலாமே னு பண்றாங்களானு தான் புரியல நமக்கு…
உண்மையில் பெண்ணியம் ரொம்ப சாதாரணமான விஷயம்..இன்னும் சொல்லனும்னா பெண்களுக்கு மட்டுமே பொருந்துவது கெடையாது..ஆண்களுக்கும் பொருந்தும்
சுருக்கமா சொல்லனும்னா பெண்கள் அப்படின்ற காரணத்துக்காக ஒதுக்கப்படாம இருக்கணும்..அவ்ளோதான்.
நீயே ஒரு பொண்ணு..நீ ஏன் இதுல தலையிடுற னு கேக்கறாங்க பாருங்க..அவங்கள எதிர்க்கறது தாங்க பெண்ணியம்
பண விஷயத்துல நீ எதுவும் பேசாதே..நான் பாத்துக்கறேன் னு அடக்கற நெலம இன்னும் எவ்வளவு வீடுகள்-ல நடக்குது தெரியுமா? அத விடுங்க..குழந்தை வளக்கறதுல..ஸ்கூல், காலேஜ், படிப்பு இதுல எடுக்கற முடிவுகள் வரைக்கும் ஒரு முக்கியமான விஷயம்-னா கலந்து ஆலோசிக்க கூட சில பெண்களுக்கு வாய்ப்பு கெடைக்கிறதில்ல…
இதெல்லாம் சரி செய்யறது தாங்க பெண்ணியம்…முடிவு எடுக்கறது, வேலைல பதவி உயர்வு..இதெல்லாம் தனி மனித திறமையே தவிர இதுல பெண்ணா ஆணா என்ற கேள்விக்கே இடமில்லை
மனதுக்கு பிடிச்சருக்கா அதை பண்ணுங்க..நாம பெண்ணாச்சே இத பண்ணா உலகம் தப்பா பேசுமே னு பயப்படாம பண்ணுங்க…இது ஆண்களுக்கும் அப்படிதான்..ஆண்கள்-னாலே இப்படி தான் இருக்கணும் னு சமூகத்துல போட்ட வரையறை எப்போதுமே சரி வரும்னு சொல்லமுடியாது..அதை உடைத்தெறிய தயங்க வேண்டாம்
இவ்வளோ சுலபமான விஷயத்தை கலாச்சாரம், சமூக விதி மீறல்கள் இதோட போட்டு கொழப்பி, பெண்ணியம் பேசறது என்றாலே ஆண்கள் எல்லாரும் பத்து அடி தள்ளி போக வெச்சுட்டாங்க
ஆண்கள் அழ கூடாதுனு எவன் சொன்னான்? பெண்களுக்கு வண்டி ஓட்ட தெரியாதுன்னு யார் சொன்னா?
போங்க..போய் எல்லாரும் ஒண்ணா நிம்மதியா வாழற வழிய பாருங்க…தனித்துவத்தை கொண்டாடுங்க!