இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகள் புரிந்த வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் தோனி கடந்த வாரம் சனிக்கிழமை தனது ஓய்வை அறிவித்து இருந்தார் தனக்கான விடைபெறுதல் போட்டி நடக்க வேண்டும் என்றெல்லாம் அவர் விரும்பவில்லை அதுபோன்ற எந்தவிதமான கோரிக்கையையும் அவர் பிசிசிஐயிடம் வைக்கவில்லை. 19:29 மணிக்கு ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் தோனியின் கடைசி போட்டி எங்கே என்பதை விவரித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார்.
எம்எஸ் தோனியின் கடைசி போட்டி பற்றி விவரித்த விவிஎஸ் லக்ஷ்மன் : எம் எஸ் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தீராத காதல் உண்டு அதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் அந்த அணி அவரின் தலைமையின் கீழ் வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் ஒரு அணியாக விளங்குகிறது.
அதுவும் குறிப்பாக அவர்களுடைய கோட்டை என்று அழைக்கப்படும் சென்னையில் அவர்கள் பெற்றுள்ள வெற்றிகளுக்கு சென்னையின் விசில் சத்தமே சான்று ஆகும் .
மேலும் அவர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடியது தான் அவரது பிரியாவிடை போட்டியாக அமைந்தது
அந்த போட்டியை போலவே தோனியின் பிரியாவிடை போட்டியும் சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நிகழும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் இதைத்தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் அவர்கள் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள அனைத்து ரசிகர்களும் தோனியின் கடைசி ஆட்டத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள் என்றார் லட்சுமணன்.