பாகிஸ்தானிடம் தோல்வி… விராட் கொடுத்த நெத்தியடி பதிலடி!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித்துக்கு பதில் இஷான் கிஷான் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு, விராட் கோலி அளித்த நெத்தியடி பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

virat kohli

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பிறகு, காணாளி வாயிலாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி பங்கேற்றார். அப்போது, செய்தியாளர் ஒருவர் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு நல்ல பாமில் உள்ள இஷான் கிஷானை அணியில் சேர்ப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத கோலி, ஷாக் ரியாக்ஷன் கொடுத்த கோலி, நீங்கள் உண்மையாக தான் கேட்கிறீர்கள் என வினவினார். 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா போன்ற ஒரு வீரரை நீக்க வேண்டுமா ? என்று கேட்டு கிண்டலாகவும் சிரித்தார்.

மேலும், நீங்கள் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதனை தன்னிடம் முன் கூட்டியே தெரிவித்து விட்டால், அதற்கு ஏற்றார் போல் பதிலளிக்க வசதியாக இருக்கும் என்று கூறி செய்தியாளருக்கு பதிலடி கொடுத்தார். கோலியின் இந்த பதிலுடன் கூடிய வீடியோ மற்றும் ஷாக் ரியாசன்கள் பேஷ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கோலி, பாகிஸ்தானிடம் இந்தியா அடைந்த தோல்வியால் இந்த உலகமே முடிந்து விட்டதாக தோன்றவில்லை என்று கூறினார்.

Exit mobile version