சிறப்பாக விளையாடி எத்தனையோ வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் அந்த லிஸ்ட்டில் மிக நீண்ட காலமாக சூர்யா குமார் யாதவ் காத்துக்கொண்டிருக்கிறார்.
ஐ.பி.எல் தொடரில் மிக சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய தொடரில் விஜய் சங்கர்,நடராஜன் ,சைனி, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்தனர்.ஆனால் கடந்த மூன்று வருடமாக ஐ.பி.எல் தொடர் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய சூர்ய குமார் யாதவ் இந்த முறையும் இந்திய அணியில் வழங்கப்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் சூர்ய குமார் யாதவ் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாகவும்,அதிக ரன் அடிக்கும் ரன் மிஷினாகவும் இருந்து வருகிறார்.ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் எப்படியாவது இந்திய அணியில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கும் வேளையிலும் bcci இவரை காரணமின்றி நிராகரித்து கொண்டே வருகிறது.
சூர்ய குமார் யாதவின் நெருங்கிய நண்பர் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே இந்திய அணியில் சிறப்பாக விளையாடி தற்போது ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் பதவியும் வகித்து வருகிறார்.இந்த நிலையில் அவருடன் விளையாடி வந்த சூர்ய குமார் யாதவ் இந்திய அணிக்கு தகுதியே பெறாதது மிகவும் வருத்தமளிக்கிறது.மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங்,கவாஸ்கர் ஆகியோர் இது குறித்து நிர்வாக கமிட்டியிடம் தொடர்ந்து கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.