பும்ரா மற்றும் போல்ட்டின் சிறப்பான பந்து வீச்சால் 136 ரன்களுக்குள் சுருண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
அபு தாபியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்ய குமார் யாதவ் 79 அடித்து நிலைத்து ஆட 20 ஓவர் முடிவில் 193 ரன்கள் அடித்தது.194 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதல் அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழக்க, ஒரு முனையில் அசராமல் நின்று பட்லர் 50 ரன்களை கடந்தார்.தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்த்த பட்லர்(70 ரன்கள்,44 பந்துகள்) பாட்டிசன் வீசிய 14 வது ஓவரில் பொல்லார்டிடம் எல்லை கோட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
14 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து இருந்தது.அடுத்த வந்த டாம் கர்ர்ன்(15 ரன்கள்,15 பந்துகள்)பொல்லார்ட் வீசிய 15 வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார்.பும்ரா போட்ட அடுத்த ஓவரில் திவாதியா மற்றும் கோபால் விக்கெட்களை வெளியேற்ற,ஆர்ச்சர் 17 வது ஓவர் வீசிய போல்ட் பந்தில் ஒரு சிக்ஸர் பறக்க விட்டு அசத்தினார்.18 பந்துகளில் 70 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு தேவையாக இருக்க,பும்ரா பந்தில் தொடர்ந்து ஆர்ச்சர்(24 ரன்கள்,11 பந்துகள்) 2 பௌண்டரிகளை தெறிக்கவிட்டு அதே ஓவரில் பொல்லார்ட் கைகளில் அவுட் ஆனார்.பாட்டிசன் பந்தில் ராஜ்புட் நடையைக்கட்ட ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே அடித்தது.மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
மும்பை அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்களும்,பாட்டிசன் மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்களை எடுத்து இருந்தனர்.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பட்லர் 70 ரன்கள் அடித்து இருந்தார்.
மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த சூர்ய குமார் யாதவ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.