டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது!
கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ள இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் வருகிற 25-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த முகாமில் 16 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.