கடைசி ஓவரை பிராவோ ஏன் வீசவில்லை என சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேற்று ஜெயிக்கும் நிலையில் இருந்தாலும்கூட டெல்லி கேபிட்டல்ஸ் அணீ 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.20 ஓவர்கள் முடிவில்179 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து வென்றது.
கடைசி ஓவரை சென்னை அணி சார்பில் ஜடேஜா வீசினார்.இதில் படேல் 3சிக்சர்கள் அடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டிக்குப் பின் சென்னைஅணியின் கேப்டன் தோனி,கூறியதாவது : பந்து வீச்சாளர் பிராவோ உடற்தகுதியுடன் இல்லை.இதனால்தான் ஜடேஜாவுக்கு வாய்ப்புத் தரப்பட்டது.
மேலும், ஷிகர் தவானின் சில கேட்சுகளை மிஸ் செய்தோம். அவர் ரன் ரேட்டை நல்ல முறையில் கொண்டு செல்வார். ஹிகர் தவான் நன்றாக பேட்டிங் செய்தார் என்று தெரிவித்துள்ளார். .