ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர், கடந்த 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி கோலி தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இந்த இரு அணிகளும் இதுவரை 27 முறை மும்பை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 4 முறை சம்பியனான மும்பை 18 முறை வெற்றி பெற்றுள்ளது. 7 முறை மட்டுமே பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணிகள், தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியை சந்துத்துள்ளன.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா நல்ல பார்மில் உள்ளார். இவருடன் டீ காக், பொல்லாட், பாண்டிய பிரதர்ஸ் மற்றும் சூர்யாகுமார் யாதவ் போன்றோர் இணைந்தால் சிக்ஸர் மற்றும் பவுண்டறிகளுக்கு பஞ்சம் இருக்காது. முதல் ஆட்டத்தில் சொதப்பினாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா அசத்தலான பவுலிங்கை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு இணையாக வேகத்தில் போல்ட், பாட்டின்சன் எதிரணி வீரர்களை திணறடிக்க, சுழற்பந்து வீச்சில் குருணால் பாண்டியா, சாஹர் ஆகியோர் ரன் வேகத்தை கட்டுப்படுத்த ஒத்துழைத்து வருகின்றனர்.
கொல்கத்தா அணியை பொறுத்த வரையில், விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்சையே அந்த அணி பேட்டிங்கில் மலை போல் நம்பி உள்ளது. இரண்டு ஆட்டங்களிலும் டிவிலியர்ஸ் நல்ல ஹிட்டிங் பார்மிலேயே உள்ளார். ஆனால் கோலி சொற்ப ரன்களிலேயே வெளியேறுவதோடு, பீல்டிங்கிலும் சொதப்பி வருகிறார்.
இளம் வீரர் தேவ்தத் படிக்கல் நல்ல அறிமுகமாக உள்ளார். அதேசமயம் அனுபவம் வாய்ந்த பின்ச் ரன் சேர்க்க திணறி வருகிறார். டிவில்லியர்சுடன் மற்ற வீரர்களும் கைகோர்த்தால் மட்டுமே அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் வலுப்பெறும்.
எல்லா தொடரையும் போன்று இம்முறையும், பெங்களூரு அணியின் பந்துவீச்சு கேப்டன் கோலிக்கு தலைவலியாக மாறி உள்ளது. ஸ்டெயின், உமேஷ் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் ரன்களை வாரி இறைக்க, இளம் வீரர் சைனியும் சொதப்பி வருகிறார். சாஹல் மட்டுமே அந்த அணியின் பந்து வீச்சில் நம்பிக்கையூட்டும் விதமாக செயல்பட்டு வருகிறார். கோலியின் ஆட்டம் கடந்த 2 போட்டிகளிலும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே, இரு அணிகளும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற முனைப்பு காட்டுவதால் போட்டியில் பரபரப்பிறக்கிய குறைவு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.