ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு, ராஜஸ்தான் அணி ரன்களை 155 இலக்காக நிர்ணயித்துள்ளது.
அபுதாபியில் நடந்த 15வது லீக் போட்டியில், ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ராஜஸ்தான் அணியில், பட்லர்-ஸ்மித் ஜோடி களமிறங்கியது. முதல் 2 ஓவர்களில் அட்டகாசமான சிக்சர் மற்றும் பவுண்டரிகள் பறக்க, ராஜஸ்தான் அணி பெங்களூர் அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலலேயே ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது.
இசுரு உடானா வீசிய 3வது ஓவரில் ஸ்மித் க்ளீன் போல்டாகி 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் 3 பவுண்டரி ஒரு சிக்சர் என அதிரடியாக ஆடிய பட்லர் 22 ரன்கள் எடுத்திருந்த போது, சைனி ஓவரில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க போட்டிகளில் அதிரடியாக ஆடி ரன் குவித்த சஞ்சு சாம்சன், சஹால் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். அந்த பந்து தரையில் பட்டது போல் இருந்தாலும், 3வது நடுவர் அவுட் கொடுத்ததால், சஞ்சு சாம்சன் 4 ரன்களுக்கு வெளியேறினார்.
ராஜஸ்தான் அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், நிதானமாக ஆடிய உத்தப்பா பந்துகளை மெதுவாக தொட்டு பார்த்து ரசிகர்களை சோர்வடைய செய்தார். ஒரு கட்டத்தில், 22 பந்துகளுக்கு 17 ரன்களை மட்டுமே சேர்த்த உத்தப்பா, சஹால் பந்துவீச்சில் உடானாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லோமோர்-பராக் ஜோடி, பொறுப்புடன் ஆடத்தொடங்கினர். அதிரடியாக ஆடாவிட்டாலும், விக்கெட் இழப்பை தடுத்து நிதானமாக ரன் குவித்தனர். தொடர்ந்து, 16 ரன்கள் எடுத்து இருந்தபோது அவுட்டாகி வெளியேறினார்.
3 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் லோமோர் 47 ரன்கள் சேர்த்து லோமோர் அவுட்டாக, இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய திவேத்தியா 24 ரன்களையும், ஆர்ச்சர் 16 ரன்களையும் சேர்க்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. பெங்களுர் தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளையம், உடானா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.