தடுமாறும் இந்திய அணி : 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இங்கிலாந்துக்கு  எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்சில்  337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பேட் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 2-வதாக களமிறங்கிய இந்திய அணியில் ரிஷப் பாண்டே 91 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். வாஷிங்கடன் சுந்தர் இந்தமுறையும் அரைசதம் எடுத்தார். இந்திய அணியில் விக்கெட்டுகள் சரசரவென விழத் தொடங்கின. இந்த நேரத்தில் வாஷிங்கடன் சுந்தர் மட்டுமே இந்திய அணியை காப்பாற்ற கடைசி வரை போராடினார். என்றாலும் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்தியா, இங்கிலாந்தை விட 241 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி தற்போது தனது 2-வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறது.

Exit mobile version