இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டன், இந்தியாவுக்கு அதிக கோப்பைகளை பெற்று தந்தவருமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார்.
அவரின் இந்த முடிவை அறிந்த ரசிகர்கள் பலர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தோனி ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து டெண்டுல்கர் தனது டுவிட்டரில், “ 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியுடன் இணைந்து விளையாடி கோப்பையை கைப்பற்றியது என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த தருணம் எனவும், இந்திய கிரிக்கெட்டில் தோனியில் பங்களிப்பு மகத்தானது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் தோனி தலைமையின் கீழ் இந்திய அணி, கடந்த 2007 ஆம் ஆண்டு டுவெண்ட்டி 20 உலக கோப்பையை கைப்பற்றியது. பின்னர் கடந்த 2010 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளிலும்,2011ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.