தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவர் கைது.
சென்னையின் அணி வீரர்களின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் சேவாக் கடுமையாய் விமர்சித்துள்ளார். அதில் சமீபத்திய போட்டியில் சென்னை அணி ஜெயித்திருக்க வேண்டியது ஆனால் ஜடேஜா மற்றும் ஜாதவின் மந்தமான ஆட்டத்தால் அணி தோற்றது. சென்னை அணி வீரர்கள் அணிக்காக விளையாடுவது அரசுவேலை போலக் கருதுகிறார்கள். விளையாடாவிட்டாலும் அவர்களுக்குச் சம்பளம் வந்துவிடும் என்று நினைக்கிறார்கள் எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை அணி தொடர் தோல்வி அடைந்து வருவதால் கேப்டன் தோனியின் மகள் ஷிவா (5 வயது ) சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் தோனியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, இதுபோன்ற மிரட்டல்களுக்கு கண்டம் தெரிவித்தனர்.
அணியின் செயல்பாட்டுக்கு ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று தோனி, ஜாதவ், ஜடேஜா உள்ளிட்டோருக்கு ஆதரவு தெரிவித்தனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
இதையடுத்து, தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தடு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதுதொடர்பாக தோனியின் மகளுக்குமிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குஜராத்தின் முந்த்ராவில் இருந்து 16 வயது சிறுவன் ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நம்னா கபயா என்ற கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுவனை ராஞ்சி போலீஸில் ஒப்படைக்கப்படுவார் என்று அஹமதாபாத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.