2020-ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
யுஏஇ-யில் ஐ.பி.எல் தொடர் தொடங்கியதில் இருந்து பஞ்சாப் அணி வெற்றிபெற திணறியது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர்.
கே.எல் ராகுல் 10 போட்டிகளில் 1 சதம், ஐந்து அரைசதங்களுடன் 540 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். மயங்க் அகர்வால் 9-வது போட்டி வரை 1 சதம், 2 அரைசதங்களுடன் 393 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் இருந்தார். ஆனால் நேற்று ஐந்து ரன்கள் மட்டுமே அடித்தார்.
இந்நிலையில் டெல்லி அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் முதல் ஆறு ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளார். ஆனால் அதன்பின் கடைசி நான்கு போட்டிகளில் சுதாரித்து ஆடினார் தவான். இதன்மூலம் இரண்டு அரைசதம், இரண்டு சதங்கள் (69, 57, 101, 106) என சிறப்பாக விளாசி 465 ரன்களுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் அவர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டூ பிளஸ்ஸி 375 ரன்களுடன் 4-வது இடத்திலும், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 347 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.