சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் பெங்களூர் அணி பச்சை நிற உடை அணிந்து களம் இறங்கியுள்ளது.
துபாய்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் தொடர் 44 வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி வழக்கம் போல் அவர்களுக்கான கருப்பு மற்றும் சிவப்பு கலந்த உடை அணியாமல் பச்சை நிற உடை அணிந்து ஜொலித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பெங்களூர் அணி எதாவது ஒரு லீக் ஆட்டத்தில் பச்சை நிற உடை அணிந்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பச்சை நிற உடை அணிவதன் நோக்கம் பசுமை வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும்,பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுப்பதாகவும் கருதப்படுகிறது.அதன் விளைவாக பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடும் அணியின் கேப்டனுக்கு மரக்கன்று ஒன்று அன்பளிப்பாக வழங்கப்படும்.இந்த ஆண்டு அந்த வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சென்றுள்ளது.
இதுவரை பெங்களூர் அணி பச்சை அணி உடை அணிந்து விளையாடிய 10 போட்டிகளில் 2 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இதேபோல் 2014 ல் சென்னை அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.