நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக நாசா கூறியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய என்றுமே ஒரு படி முன்னாள் இருக்கின்றது. சந்திராயன் போன்ற செயற்கைகோள் அனுப்பி சாதனை படைத்துள்ளது. மேலும் நிலவில் தண்ணீர் இருக்கின்றதா இல்லையா போன்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதனை பற்றி நாசா கூறியுள்ளது யாதெனில் நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக நாசா கூறியுள்ளது. இது பற்றி நாசா கூறும் போது, “சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள பூமியிலிருந்து தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், சந்திரனின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது, இது அதிகளவில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.