ஜேம்ஸ் வாட் 1736-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் தேதி, ஸ்காட்லாந்தின் Greenock நகரில், ஒரு செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கப்பல் கட்டும் நிறுவனத்தை நடத்தி வந்தார். சிறு வயது முதலே சரியாக பள்ளிக்குச் செல்லாத ஜேம்ஸ் வாட்டிற்கு, அவரது தாய் Agnus பாடம் கற்றுக்கொடுத்தார். ஆனால், ஜேம்ஸ் வாட்டின் தந்தையோ, அவருக்கு தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்.
ஜேம்ஸ் வாட்டின் 18-வது வயதில், அவரது தாய் இறந்த நிலையில், தனது தந்தையின் தொழிலிலும் நஷ்டம் ஏற்படவே, அவர் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், லண்டனில் உள்ள அறிவியல் சார்ந்த கருவிகளை தாயாரிக்கும் பனிமனையில், வேலைக்குச் சேர்ந்த வாட், இரண்டே மாதத்தில், இரண்டு வருடங்களாக பணிபுரிபவர்களிடம் இருக்கும் அனுபவத்தைக் காட்டிலும், அதிக திறமைகளை வளர்த்துக்கொண்டார். அதன்பின்பு, Glasgow பல்கலைகழகத்தின் ஆய்வகங்களில் உள்ளக் கருவிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கு தன் தொலிழ்நுட்ப அறிவை, மேலும் மெருகேற்றிக் கொண்டார்.
1763-ஆம் வருடத்தில், ஒரு நாள் வாட்டிற்கு முதல் முறையாக ஒரு நீராவி என்ஜினை சரிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பான்மையானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல, ஜேம்ஸ் வாட் உலகின் முதல் நீராவி என்ஜினைக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கெனவே உபயோகத்தில் இருந்த அதிகம் பயன்படுத்தப்பட்டு வராத, Newcomen வகை என்ஜினை மறுகட்டமைப்பு செய்து, அதன் செயல் திறனை 80 சதவிகிதம் வரை மேம்படுத்தினார், ஜேம்ஸ் வாட். இங்கிலாந்தில் அதுவரை Newcomen வகை என்ஜின்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன.
நான்கில் மூன்று பங்கு எரிபொருள், அந்த என்ஜினின் Cylinder-ஐ சூடாக்குவதிலும், குளிர்விப்பதிலுமே செலவிடப்பட்டதை கண்டறிந்த ஜேம்ஸ் வாட், அதற்கான மாற்று முறையை ஆராயத் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1765-ஆம் ஆண்டு, தான் எதிர்பார்த்த வகையில் இயங்கும் என்ஜினை வடிவமைத்தார், ஜேம்ஸ் வாட். என்ஜினின் Cylinder-ஐ, ஒரே சீரான வெப்பநிலையில் வைக்கவும், நீராவியை உரைவிப்பதற்கு Condenser போன்ற புதிய பாகங்களையும் இணைத்தார்.
அது ஒரு என்ஜின் மாதிரி வடிவம் தான் என்றாலும், இதனை வணிகமையமாக்க சில மாற்றங்கள் தேவைப்பட்டதுடன், அதற்கான பொருளாதார உதவியும் அவருக்கு தேவைப்பட்டது. அப்பொது தான், John Roebuck என்னும் தொழிற்சாலை உரிமையாளரின் அறிமுகம் கிடைத்தது. அவரும் ஜேம்ஸ் வாட்டிற்கு நிதியுதவி செய்தார்.
ஆனால், சிறிது காலத்தில் John Roebuck-ன் தொழில் நஷ்டமடைய, Mathew Boulton என்பவர் அந்த நிறுவனத்தை ஏற்று, நடத்த தொடங்கினார். 1769-ல், தான் கண்டுபிடித்த என்ஜினுக்கு காப்புரிமை வாங்கினார் வாட். 1775-ஆம் ஆண்டு Boulton உடன் இணைந்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக என்ஜின்களை தயாரித்தார். இங்கிலாந்தின் வளர்ச்சிக்கும், தொழில்புரட்சிக்கும் இவரது கண்டுபிடிப்பே கிக முக்கிய காரணமாக அமைந்தது என்றால், அது மிகையாகாது.
நீராவி என்ஜின் மட்டுமல்லாமல், உலகின் முதல் அச்சடிக்கும் இயந்திரத்தையும் கண்டுபிடித்தார், ஜேம்ஸ் வாட். நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளதை கூறிய முதல் ஆராய்ச்சியாளரும், இவர் தான். என்ஜினின் ஆற்றலை கணக்கிடும் அலகாக குதிரைதிறனை (Horse Power) வகுத்தவர், இவர் தான்.
அதுமட்டுமல்லாமல், power-ன் ஆற்றலுக்கு watt என, இவரது பெயரே அலகாக சூட்டப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வாட், 1784-ஆம் ஆண்டு Royal Society of Edinburgh மற்றும் 1789-ல் Smetonian Society of civil Engineers போன்ற குழுக்களின் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டார்.
2009-ல், Bank of England, ஜேம்ஸ் வாட் மற்றும் Boulton அவர்களது புகைப்படங்களை அச்சடித்து பெருமைப்படுத்தியது. மான்செஸ்டர் நகரில் இவரது சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. அவர் தொழிற்சாலையில் பயன்படுத்திய பொருட்கள், இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஜேம்ஸ் வாட் பெயரில், ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது.
அவருடைய மகன் ஜேம்ஸ் வாட் ஜுனியர், தொழிற்சாலையையும் நடத்தி வந்தார். ஜேம்ஸ் வாட், 1819-ஆம் ஆண்டு, தனது 83-வது வயதில், இங்கிலாந்தின் Heathfield நகரில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். ஜேம்ஸ் வாட்டை, Handsworth-ல் உள்ள St. Mary’s Church-ல், அவரது நன்பர் Mathew Boulton-ன் கல்லறையின் அருகே அடக்கம் செய்தனர்.