செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் விட்டுவிட்டோமானால் அதன் பின் அவற்றுக்கு எரிபொருள் தேவைப்படாது. எதுவும் அவற்றை தடுக்காத வரை அவை தொடர்ந்து சுற்றிகொண்டே இருக்கும். பூமி மேற்கில் இருந்து சுற்றி வருவதால் பெரும்பாலான செயற்கைகோள்கள் கிழக்கு மேற்காக சுற்றி வருகின்றன.
அதே போல் பூமியை பெரும்பாலான செயற்கைக்கோள் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. ஒருசில செயற்கைக்கோள்களே வட்டப்பாதையில் சுழல்கின்றன. நீள் வட்டப்பாதையில் சுற்றும் போது பூமிக்கு அருகில் இருக்கும் நிலையை perigee என்றும், தொலைவில் இருக்கும் நிலையை apogee எனவும் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக perigee 200கிலோ மீட்டர் தொலைவு வரையும் apogee 75,000 கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும்.செயற்கைகோளை ஒரே நிலையில் வைக்க Vernier Rocket Motor எனப்படும் இயந்திரம் பொருத்தப்படுகிறது.
செயற்கைகோள்கள் பூமிக்கு மேலே மிக உயரமாக இருப்பதால் ஒரே நேரத்தில் பல நாடுகளை அதனால் காண முடியும். உயர் தொழில்நுட்ப காமிராக்களை கொண்டு விவசாய நிலங்கள், மலை, ஆறு, கடல் முதலானவற்றை பார்வையிடலாம்.செயற்கைகோள் மூலம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை உலகம் முழுதும் ஓளிபரப்பலாம். G.P.S மூலமாக ஒருவர் தான் செல்லவேண்டிய வழியை எளிதாக அறிந்துகொள்ளவும் முடிகிறது. ராணுவ செய்திகள், உளவு செய்திகளை விரைவாக பகிர்ந்துகொள்ள செயற்கைகோள் உதவுகிறது.
இந்தியாவின் முதல் ராக்கெட் SLV 3 அதாவது Satellite Launch Vehicle. இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 1979 ஆகஸ்ட் 10ல் செலுத்தபட்டது. அதன் பின் Augumented Satellite Launch Vehicle எனப்படும் ASLV ராக்கெட் 4 முறை செலுத்தப்பட்டதில் 2 முறை வெற்றி கிடைத்தது.
Cryogenic Engine உடன் கூடிய Polar Satellite Launch Vehicle எனப்படும் PSLV ராக்கெட் முதல்முறையாக 1993ல் செலுத்தியபோது தோல்வியடைந்தது. ஆனால் அடுத்தமுறை வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொடர்ந்து PSLV ராக்கெட் பல நாட்டு செயற்கைகோள்களை ஏந்திக்கொண்டு விண்வெளிக்கு சென்றுள்ளது. பின் PSLV ஐ விட அதிக திறன் வாய்ந்த Geostationary Satellite Launch Vehicle ஐ விண்னில் செலுத்த இந்தியா தீர்மானித்தது. 400 டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட இவ்வகை ராக்கெட்கள் ரஷ்யா தொழில்நுட்பத்துடன் செலுத்தி வந்த இந்தியா தன் சொந்த முயற்சியில் தோற்று பின் வெற்றியும் பெற்றது.