தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து நடிகர் விஜய் அதிரடிக்காட்டியுள்ளார்.
சமீப நாட்களாக ஊடகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள விவகாரம் நடிகர் நடிகர் விஜய்யின் தந்தை புதிய கட்சி தொடங்கிய விவகாரம்தான் அண்மையில் புதிய கட்சியை பதிவு செய்த நிலையில், நடிகர் விஜய் தனது இயக்க நிர்வாகிகளை மாற்றியமைத்து அதிரடிக்காட்டியுள்ளார்.
அதன்படி, ‘தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு’ மாவட்ட வாரியாக, தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார் நடிகர் விஜய். மேலும், தனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆதரவாளர்களுக்கு எவருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.