சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஊழல் குறித்து அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் திமுக சார்பில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இரண்டு முன்னாள் மேயர்கள் மோதுவதால் சைதாப்பேட்டை தொகுதி கவனத்தைப் பெற்றுள்ளது. சைதை தொகுதியும் திமுகவின் கோட்டை தான், அதுமட்டுமின்றி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இருமுறை வென்றுள்ளதால் ஸ்டார் தொகுதி அந்தஸ்தும் சைதைக்கு உண்டு. திமுக 9 முறையும் அதிமுக 4 முறையும் காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி அவருடைய சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையால் நன்கு அறியப்பட்டவர். 1984ம் ஆண்டு சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதே நேரத்தில், 1980, 1989, 1996 சட்டமன்ற தேர்தலில் மூன்று முறை தோல்வியைத் தழுவியுள்ளார். சைதை துரைசாமி 2011 – 16 வரை சென்னையின் மேயராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் தொட்டதுக்கு எல்லாம் கமிஷன் அடித்து பல்லாயிரம் கோடிகளை வெளிநாடு முதலீடுகளாகவும், வங்கி டெபாசிட்டுக்களாகவும் மாற்றியுள்ளதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
ஊழல் செய்து சம்பாதித்த கோடிகளை வெளிநாடுகளில் சொத்துக்களாக வாங்கி பதுக்கி வைத்துள்ளது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, துபாயில் TIERA City-யில் 1900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம், இங்கிலாந்தில் OAKLEY PROPERTY, அமெரிக்காவில் நட்சத்திர சொகுசு விடுதி, மலோசியாவில் ரியல் எஸ்டேட் என நாட்டுக்கு நாடு விதவிதமான வகைகளில் சொத்துக்களை வாங்கி முதலீடு செய்துள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி சைதை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை CANINE CLUB என்ற பெயரில் வெளிநாட்டு அரிய விலங்குகள் மற்றும் பறவைகளை வைத்து விநோத மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. தாத்தா சைதை துரைசாமி செய்த ஊழல்கள் எல்லாம் போதாது என்று அவருடைய பேரன் சித்தார்த் பெயரில் இயங்கி வரும் எனர்ஜி சோலார் கம்பெனியில் பல்லாயிரம் கோடிக்கு ஊழல்கள் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகராட்சி மேயராக இருந்த போது மாநகராட்சி உணவகத்தில் சப்பாத்தி தயாரிக்கும் எந்திரம் வாங்குவதிலும், சாலையோர நடைபாதைகளில் LED விளக்குகள் பொருத்துவதிலும் கூட பல கோடிகளை வாரிச்சுருட்டியிருக்கிறார் பலே ஆசாமியான சைதை துரைசாமி.
சென்னை மக்களிடம் வீட்டு வரி, தொழில் வரி, தண்ணி வரி என விதவிதமாக வரி வசூலித்த காசில் இருந்து சுரண்டியது போதாது என்று, திருந்தணி குன்னத்தூர் கிராமத்தில் மட்டும் 47 ஏக்கர் 35 செண்ட் ஏழைகளின் நிலத்தை மிரட்டி வாங்கியதாக சைதை துரைசாமி மீது நில அபகரிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் ஊழல் முகம் தெரிந்ததால் தான் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு மீண்டும் அதிமுகவில் கோலோச்சி தன்னுடையை ஊழலை ஜோராக அரங்கேற்ற தற்போது மீண்டும் சைதை தொகுதியில் களமிறங்கியுள்ளார் ஊழல் மன்னம் சைதை துரைசாமி என்ற கருத்துக்கள் பரவி வருகிறது.