பெரியாறு அணையில் வரும் அக்டோபர் 7-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரியாறு அணை
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள
ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக வரும் 7-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1,037 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். 7-ந் தேதி திறப்பு.
இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி, 18-ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4,614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வரும் 7-ம் தேதி முதல் 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கன அடி வீதம், மொத்தம் 255 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.