சைதாப்பேட்டை பகுதியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று காணலானார்.
நிவர் புயல் காரணமாக பெரும் மழையும் பெரும் காற்றும் விடாமல் அடித்துக்கொண்டு இருக்கின்றது. அதனால் 144 தடை உத்தரவுகள் விடுக்கப்பட்டு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு முநேர்ச்சரிக்கிளுடன் கடும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுப்பிக்கப்பட்டு வருகின்றது. அதனால் பெரும் பொருள் சேதாரமும், உயிர் சேதாரமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை பகுதியை எதிர் கட்சி தலைவரான திமுக ஸ்டாலின் இன்று காலை பார்வையிட்டார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆபிரகாம் பாலம் அங்கிருந்து அடையார் பாலம் வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன் அருகில் உள்ள பெட்டித்தோட்ட பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களையும் தந்தார்.
மேலும் அவருடன் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் எம்.எல்.ஏ மா. சுப்ரமணியன் இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை எம்.ஜி.ஆர் பகுதியில் நிவாரண பொருட்களை அளித்துவிட்டு. வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வை இட்டபின்னர் சோளிங்கநல்லூரில் உள்ள தாழாவான பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்க உள்ளார்.