ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அதிமுக சீனியர்கள் எசிலி.
சமீபத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார் ஓ.பிஎஸ். இதனால் உட்கட்சியில் நீடித்த குழப்பங்கள்ன் அதிமுகவில் விலகியது. ஆனால்முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் தான் தீர்ந்ததே தவிர மற்றொரு பிரச்சனை தற்போது முளைத்துள்ளது.
அதாவது, பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்த கருத்தின் படி, ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது தற்காலிய முதல்வராகவும் ஜெயலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ஓபிஎஸ். ஜெயலலிதா மறைந்த போது முதல்வரானார்., ஆனால் சசிகலா தரப்பு அவரை நீக்கிவிட்டு எடப்படி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது.
அதன்பின் நடந்துஅனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இம்முறை முதல்வர் வேட்பாளராக தன்னை அறிமுகம் செய்ய வேண்டுமென பல கட்டமாக தனது ஆதவரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்த ஓபிஎஸ்.
இம்முறையும் எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக நிற்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து அந்த அதேநேரம் தேர்தல் சமயத்தில் வேட்பாளரை மாற்றுவது மட்டுமல்ல அவருக்கு ஆதரவு குறைவாக உள்ளதும் ஒரு காரணமாக கூறப்பட்ட நிலையில், கட்சியில் தனக்கும் அதிகபட்ச அதிகாரம் மற்றும் தனது மகன் ஓபி.ரவீந்தரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி ஆகியவற்றிற்கு இபிஎஸ் சம்மதம் அளித்த பிறகே ஒருமனதாக ஓபிஎஸ் முதல்வாராக பழனிசாமியை அறிவித்துள்ளார்.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக இதற்கு என்ன பதில் சொல்லுமோ என்று பின்னர்தான் தெரியவரும்.
அதன்பிறகுதான் இபிஎஸை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து திரும்பியுள்ளார். ஆனால் ரவீந்தரநாத் குமாருக்கு சீனியர்கள் எல்லாம் அக்கட்சியில் இருக்கும்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதால் உட்கட்சியில் மீண்டும் போராடம் வெடிக்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.