புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரி :
புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஜான்குமார் என்று ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயரிடம் வழங்கினார். அதேபோல் நேற்று நேற்று மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்த நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகிய எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து 4 பேர் ராஜினாமா செய்ததால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. மேலும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தலா 14 எண்ணிக்கையில் சமபலத்துடன் இருப்பதால் எந்த நேரத்திலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவி வருகிறது. புதுச்சேரி கவர்னர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது செயலாளரிடம் மனு எதிர்க்கட்சியினர் மனு அளித்தனர்.
Read more – அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய குவிந்த திமுகவினர்.. அணி திரண்டு நிற்கும் கூட்டம்..
இதையடுத்து புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு சென்று திரும்பிய பின் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி, பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க அன்பழகன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




