தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக தேவையான உரத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர் பாலு நேரில் வழங்கினார்.
டெல்லி, தமிழகத்துக்கு கூடுதல் உரம் வழங்கக்கோரி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை இன்று டெல்லியில் உள்ள அமைச்சகத்தில் நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். அந்த கடிதத்தில்,தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பகுதிகள் அதிகரித்துள்ளன.
இதனால் அதற்கான உரம் தேவையும் அதிகரித்துள்ளது! ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை தமிழகத்திற்கு தேவையான உரத்தை முழுமையாக வழங்கவில்லை! எனவும் குறிப்பாக தமிழகத்துக்கு அக்டோபர் மாதத்தில் யூரியாவின் தேவை 1,66,700 மெட்ரிக் டன் ஆகும். ஆனால் இதுவரை மத்திய அரசு வழங்கியிருப்பது 61,384 மெட்ரிக் டன் மட்டுமே!! அதேபோல DAP 10,601 மெட்ரிக் டன்னும், MOP 10,250 மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வழங்கப்பட வேண்டிய யூரியாவில் 1.059 லட்சம் மெட்ரிக் டன் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இதே காலகட்டத்தில் வரங்கப்பட வேண்டிய DAPல் 32000 மெட்ரிக் டன் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரத் தேவையை விட மிக மிக குறைவு ஆகும்.
இதனால் உரத் தட்டுப்பாடு மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது என்பதால் தமிழகத்தில் சம்பா சாகுபடி பருவத்தை கருத்தில் கொண்டும் நடப்பு பருவத்தில் 125 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி என்ற இலக்கை அடைய ஏதுவாகவும் , விவசாயிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காகவும் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை குறித்த நேரத்தில் உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல ஏற்கனவே மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வழங்கப்படாமல் உள்ள பற்றாக்குறையாக உள்ள உரங்களயும் வழங்க வேண்டும். மேலும் தற்போது பயிர் சாகுபடி நிலத்தின் அளவு அதிகரித்துள்ளதால் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக தமிழகத்துக்கு கூடுதலாக 25000 மெட்ரிக் டன் யூரியாவும், 10000 மெட்ரிக் டன் MOPயும் வழங்க வேண்டும் கடிதத்தில் கோரிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.