கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இதில் பொதுமக்கள் மட்டுமல்ல பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் பலியாகி இருக்கின்றனர். தமிழகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல், சமீபத்தில் எம்.பி. ஞானதேசிகன் என அடுத்தடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோன பாதிப்பு காரணமாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5 ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு உள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் காமராஜரை மாற்ற திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.