“மேடம் ரியலி வெரி சாரி” குஷ்பூ கேட்ட மன்னிப்பு

சமீபத்தில் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் பார்த்த குஷ்பூ திடீரென மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.  

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக குஷ்பு, போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கட்சியில் புதிதாக சேர்ந்து இருப்பதால், தேசிய தலைவர்கள் அனைவரிடமும் நன்றாக பேசிப் பழக முயன்று வருகிறார். வேறு கட்சிகளில் இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை குஷ்பூ கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். எனவே, அப்படியான தலைவர்களை சந்தித்து, ‘ஸாரி’ சொல்லி சமாதானம் செய்ய விரும்புகிறார். அந்த வகையில், சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்தபோது அவரை நேரில் போய் பார்த்தார் குஷ்பூ. ‘மேம் உங்களை, ‘டுவிட்டரில்’ பல முறை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அதெல்லாம், அரசியல் ரீதியில் சொன்ன கருத்துதான். தனிப்பட்ட கசப்பு எதுவும் கிடையாது. உங்களையும் அப்படி விமர்சித்ததற்காக வருந்துகிறேன். ஸாரி…’ என, குஷ்பு சொல்லியிருக்கிறார்.
நிதி அமைச்சரோ, நான் உங்கள், ‘டுவீட்’ எதையும் பார்த்ததே இல்லை. பரவாயில்லை. அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்றிருக்கிறார்.

Exit mobile version