அதிமுக கட்சியின் 49 வது தொடக்கவிழாவை முன்னிட்டு கொடியேற்றிய முதல்வர்.
அதிமுக கட்சியின் 49 வது தொடக்கவிழாவை முன்னிட்டு இன்று முதல்வர் பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கொடியேற்றினார்.
முதல்வர் பழனிசாமி தனது தயார் மறைவையொட்டி சேலத்தில் உள்ளதால், அதிமுக கட்சியின் 49 வது தொடக்கவிழாவை முன்னிட்டு இன்று சேலத்தில் உள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அவர் கட்சிக் கொடியேற்றினார்.
மேலும் சிலுவம்பாளையம் கிராமத்து பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு கட்சிக் கொடியேற்றினார் முதல்வர் பழனிசாமி.