அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். மேலும் உயர் சிறப்பு அங்கீகாரத்தை தர வேண்டும் சூரப்பா கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இதை பற்றி அவர் அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
அண்ணா கழகத்திற்கு நிதி உதவி தேவை இருக்காது என சூரப்பா மதிய அரசுக்கு எழுதிய கடிதத்தை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி வருகின்றனர் பல தரப்பினரும். இதனை தொடர்ந்து இதை ஆரமத்திலிருந்து திமுக கட்சியினர் மிகவும் எதிர்த்து வருகின்றனர். இதனால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி சார்பில் இன்று அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன் போராட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவித்தனர்.
மேலும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என திமுக அணியினர் கூறிவருகின்றனர். அதனால் அவர்கள் கட்சியின் இளைஞரணி இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்காதே, எங்கள் கல்வி உரிமையை பறிக்காதே என்று முழக்கமிட்டும், இது கல்விப்பூஞ்சோலை; இங்கு காவிக்கென்ன வேலை என்ற பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.