காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் சோனியாகாந்தி தலைமையில் தொடங்கியது.
டெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 2-வது வரம் நடைபெற்றுவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை கொறடா மாணிக்கம் தாக்கூர், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், தொகுதி சார்ந்து எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.