அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஇதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என கடிதம் எழுதிய, பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளர்.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஓதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து அனைத்து கட்சி ஒப்புதலோடு அது சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதோடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மத்திய பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ஆளுனர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்கிறார் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதை மறுத்த பாஜக தலைவர் எல்.முருகன் காலதாமதம் செய்யாமல் ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் இந்த 7.5% இடஒதுக்கீட்டுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் எனவும் கூறினார்.
இந்த சூழலில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் 7.5% இடஒதுக்கீட்டுக்கு பாஜகவின் உண்மையான நிலை என்ன என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. பாஜகவின் இரட்டை நிலைப்பாடு எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் நந்தகுமார் பாஜக மாநில கல்வி பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதான பாஜக அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் என்ற முறையில் கடிதம் எழுதினார். நந்தகுமாரை நீக்கி தமிழக கல்வி பிரிவு தலைவர் தங்க கணேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.