72 வது குடியரசு தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
72 வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி அணிவகுப்பு நிகழ்வுகளை பார்வையிட்டார். காந்தி சிலை அருகே அமைக்கப்பட்ட மேடைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்ததை தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தார்.
அப்போது முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இதை தொடர்ந்து நாட்டுபண் இசைக்க இந்திய விமானபடை ஹெலிகாப்டர் மலர் தூவ ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியகொடியை ஏற்றி அணி வணக்கத்தை ஏற்றார். பின்பு படைகளின் பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது கோவை மாவட்டம் அப்துல் ஜபார்க்கும், திருச்சி நாராயணசாமி நாயுடுவுக்கும், நெல் திருந்திய நெல் உற்பத்தித் திறனுக்கான விருது விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த செல்வகுமாருக்கும், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் ராணிப்பேட்டை புலிவலம் அரசு உயர்நிலைப்பள்ளி உதவி ஆசிரியர் முல்லைக்கும் வழங்கப்பட்டது. வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி கால்நடை மருத்துவர் பிரகாஷ், பொதுமக்கள் பிரிவில் அண்ணா பதக்கம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த புகழேந்திரன், சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட சேலம் நகர காவல்நிலையத்தின் சார்பாக ஆய்வாளர் குமார் உள்பட சாதனையாளருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.