அதிமுக ஆலோசனை ;இபிஎஸ்- ஒபிஎஸ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்….
இன்று, அதிமுக ஆலோசனை ;இபிஎஸ்- ஒபிஎஸ் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்….
இன்று காலை பத்து மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இபிஎஸ்- இபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்துள்ளனர்.
அப்போது பேசிய முதல்வரும் இணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைகுழு அதிமுகவின் வழிகட்டலின்படி கட்சிச் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டி அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முழு சம்மதத்தோடு அறிவிப்புகள் வெளியாகிறது. இதில், 11 பேர்கொண்ட குழு அறிக்கப்பட்டுள்ளது.
இதில் ,
தங்கமணி. எஸ்.பி.வேலுமணி
ஜெயக்குமார்
சி.வி.சண்முகம்
காமராஜ்
ஜே.சி.டி.பிரபாகர்
மனோஜ் பாண்டியன். பா.மோகன்
கோபாலகிருஷ்ணன்
. மாணிக்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, முதல்வர் வேட்பாளரை ஒபிஎஸ் அறிவித்தார்.
இதற்கு முன் ஒபிஎஸ் விடுத்த வேண்டுக்கோள் மற்றும் கோரிக்கைகளை அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
பின்னர் பேசிய ஓபிஎஸ், முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை அடுத்து அதிமுகவில் நீடித்துவந்த உட்கட்சி குழப்பம் அகன்றது.
இதனால் தொண்டர்கள் அடுத்தகட்ட வேலைக்குத் தயாராக தொண்டகள் இனிப்புகள் கொடுத்து இந்த அதிகாராப்பூர்வமான தகவலை ஏற்றுக் கொண்டாடி வருகின்றனர்.