குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

சென்னை: குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென இளைஞர் ஒருவர் விழுந்தார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சக வாகன ஓட்டிகள் அனுப்பி வைத்தனர். தற்போது இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய குரோம்பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Exit mobile version