‘வீடியோ எடுக்குறயா….?மாஸ்க் போடாமல் வந்து போலீசிடம் வம்பிழுத்த சொர்ணாக்கா!!

தஞ்சையில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண் ஒருவர் காவலர்களை மிரட்டும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது .

கொரோனா பரவலால் பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் இல்லாமல் இருசக்கரத்தில் வந்த ரவுடி பேபி ஒருவர் தன்னால் அபராதம் கட்ட முடியாது என்று தெனாவெட்டாக பேசும் வீடியோ வைரல் ஆகிவருகின்றது. அந்த பெண் போலீசாரை பார்த்து ” இத்துணுண்டு மாஸ்க்குக்கு 200 ரூபாய் வாங்குறீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்ல ” என்று பைக்கில் அமர்ந்தபடியே தெனாவெட்டாக கூறுகிறார்.

அதற்க்கு அருகில் இருந்த காவலர் அதை கலெக்டர்ரிடம் போய் கேளு மா என்று கூறினார் .அதற்கு அந்த பெண்ணோ ” யோவ் கலெக்டர் ஆஹ் கூப்பிடு அவனை நானே கேட்குறே எவனோ இருந்தாலு நா மானத்தை வாங்கிடுவே ” என்று அரசு அதிகாரிகளை மரியாதை இல்லாமல் வசைபாடினார் அப்பெண்மணி.

இதனை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த மற்றொரு காவலரை பார்த்து ” ஹோ வீடியோ எடுக்குரிய எடு என்னவேணாலு எடு என்ன facebook -ல போடா போறியா, போடு நானே ஷேர் பண்றே ” நானு ரவுடி தா, நா உள்ள போற எனக்கு ஒரு பிரச்சனையு இல்ல என்று கூறிவிட்டு, மாஸ்க் உள்ள தா வெச்சுருக்கே என்னால போடா முடியாது எனக்கு மூச்சு பிரச்சனை இருக்கு என்று மூச்சேவிடாமல் பேசிவிட்டு சென்றார் அந்த ரவுடி பேபி.

பொது இடங்களில் இதுபோன்று விதிகளை மீறுவது தரக்குறைவாக நடந்து கொள்வது, காவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரை தரக்குறைவாக ஒருமையில் பேசுவது இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இச்சம்பவத்தை நீரில் கண்ட மக்கள் கேட்டுக்கொண்டனர்.

Exit mobile version