அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ள சில முக்கியமான அறிவிப்புகளில் தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும். அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.